2. பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது . அவன் போக வேண்டிய தூரமோ அதிகம் . குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான் . இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது . கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான் .
3. அங்கே ஆட்கள் யாரும் இல்லை . ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன . ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள் . " ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும் . குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும் ."
4. அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது . அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா , தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது . அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும் . அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும் , உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது .
5. அந்தப் பயணி யோசித்தான் . தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது . ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது . இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது . அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை . ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான் . தண்ணீர் வர ஆரம்பித்தது . தாகம் தீர , வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது .
6. இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன . ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும் . எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது . இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை . நம் வேலை ஆனால் சரி , அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது . " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா ?
7. அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு . விருது . நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ் , கைதட்டல் , விருது ஏதாவது இருக்கிறதா ? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து , தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான் .
8. அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும் . இது பிரபஞ்ச விதி . இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும் . ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம் . மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து , முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான் . அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம் . ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல . அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம் .
9. எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள் . செல்வத்தை மட்டுமல்ல அன்பையும் , மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள் . கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள் . நன்றி : விகடன்
10. Regards Na.Prasannan, Trichy, [email_address] [email_address] 99415-05431, 94880-19015, See my new slideshare site for All Language Power Points http://www.slideshare.net/nprasannam http://www.slideshare.net/nprasannamhindi