2. பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும் , தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன . தவிர , எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும் . இதனால் , இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன . பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில் , விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன .
3. பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும் , பார்வை திறனும் கிடைப்பதில்லை . வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன . இதனால் , இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன . எனவே , இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள் ...
4. • கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும் , தவிர்த்து விடுங்கள் . தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும்போது , டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம் . அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்
5. • கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால் , வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது . கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள் . இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும் . • பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம் , சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் .
6. • இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள் , முகப்பு விளக்குகள் , பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . • முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும் . இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் . • மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் . ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம் , ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும் .
7. • முன்னால் செல்லும் வாகனத்துக்கும் , உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள் . மேலும் , வாகனத்தை பின்தொடரும்போதும் , எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள் . • தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள் . குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ , காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள் . • எதிரில் அதிக வெளிச்சத்துடனும் , அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால் , வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள் .
8. நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால் , பார்க்கிங் லே - பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள் . அதன்பின் , முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது . • எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும் , முன்னாள் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம் . இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம் . இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன .
9. காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் , உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை . Brought to you by Na. Prasannan, B.A ., Trichy, Tamilnadu, India n.prasannam@gmail.com, 99415-05431, 94880-19015, See my new slideshare site for Tamil, English, Hindi, Malayalam Power Points http://www.slideshare.net/nprasannam